”மெல்லத் தமிழ் இனிச் சாகும்” - இது பாரதியார் வாக்கு...
நானும் பல பேர் இந்த மாதிரி மேற்கோள் காட்டறதை பார்த்திருக்கேன். என்னடா இவர் எப்பவும் தமிழ வளர்க்கணும் வளர்க்கணும்ன்னுதானே சொல்லியிருக்கார்... எப்ப ஜோசியரா மாறி மெல்லத் தமிழ் இனிச் சாகும்ன்னு சொன்னாருன்னு யோசிச்சேன்.. Project madurai புண்ணியத்துல பாரதியார் கவிதைகள தரவிறக்கி வாசிச்சதுல இருந்தது இதுதான்
“மெல்லத் தமிழ் இனிச் சாகும்- அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்
என்றந்தப் பேதை உரைத்தான்- ஆ!
இந்த வசையெனக் கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும்-கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! “
இதுதாங்க அவர் சொன்னது. தமிழ்த்தாய் தன்னைப் பத்தி பெருமையெல்லாம் சொல்லிட்டு பழம் பெருமை மட்டும் பேசிட்டு திரிஞ்சீங்கன்னா என்னை நீங்களே கொன்னுடுவீங்க, அதுனால எல்லா ஊருக்கும் போய் அங்கல்லாம் எதெல்லாம் நல்லா இருக்கோ அதையும் தமிழ்ல எழுதுங்கப்பா, அப்பதான் நான் வாழ்வேன்னு சொல்றா...(தலைப்பு: தமிழ்த்தாய் , தன் மக்களை புதிய சாத்திரம் வேண்டுதல்)
நாம எப்பவும் போல வேலை செய்ய சோம்பேறித்தனம் பட்டுகிட்டு பாரதியாரே “தமிழ் இனி மெல்லச் சாகும்”ன்னு சொல்லிட்டாருப்பான்னு சொல்லிகிட்டு திரியறோம். நீங்களே யோசிங்க தமிழ் சாகுமா வாழுமான்னு...
நானும் பல பேர் இந்த மாதிரி மேற்கோள் காட்டறதை பார்த்திருக்கேன். என்னடா இவர் எப்பவும் தமிழ வளர்க்கணும் வளர்க்கணும்ன்னுதானே சொல்லியிருக்கார்... எப்ப ஜோசியரா மாறி மெல்லத் தமிழ் இனிச் சாகும்ன்னு சொன்னாருன்னு யோசிச்சேன்.. Project madurai புண்ணியத்துல பாரதியார் கவிதைகள தரவிறக்கி வாசிச்சதுல இருந்தது இதுதான்
“மெல்லத் தமிழ் இனிச் சாகும்- அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்
என்றந்தப் பேதை உரைத்தான்- ஆ!
இந்த வசையெனக் கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும்-கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! “
இதுதாங்க அவர் சொன்னது. தமிழ்த்தாய் தன்னைப் பத்தி பெருமையெல்லாம் சொல்லிட்டு பழம் பெருமை மட்டும் பேசிட்டு திரிஞ்சீங்கன்னா என்னை நீங்களே கொன்னுடுவீங்க, அதுனால எல்லா ஊருக்கும் போய் அங்கல்லாம் எதெல்லாம் நல்லா இருக்கோ அதையும் தமிழ்ல எழுதுங்கப்பா, அப்பதான் நான் வாழ்வேன்னு சொல்றா...(தலைப்பு: தமிழ்த்தாய் , தன் மக்களை புதிய சாத்திரம் வேண்டுதல்)
நாம எப்பவும் போல வேலை செய்ய சோம்பேறித்தனம் பட்டுகிட்டு பாரதியாரே “தமிழ் இனி மெல்லச் சாகும்”ன்னு சொல்லிட்டாருப்பான்னு சொல்லிகிட்டு திரியறோம். நீங்களே யோசிங்க தமிழ் சாகுமா வாழுமான்னு...